பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

315 வீரமும் மேதையும் தீரமும் திறமும்

குலமும் நலமும் குணமும் கொள்கையும் நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய் நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்? அற்பமோ ஐய! நின் அடிச்சே வகமே?

320 என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்! மன்னோ மற்றது வெளிப்படை அன்றோ? அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும் இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற் 325 பேணியே கலுழுநள் போலும். பிறர்பால் நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள். உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்! பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்?

பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும். 330 ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண் ‘மனோன்மணி மனோன்மணி, எனுமந் திரத்தால் ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன் சாற்றலும் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன். ஆயினும். அரச! பேயுல கென்குணம்

335 அறியா ததனால் வறிதே பலவும்

சாற்றும். தன்னயம் கருதல்போற் பிறர்க்குத் தோற்றம், அதனால் தூற்றுவர். அதுவும் மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி. ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக...

340 ஓதலை. ஓதலை. உனதன் றத்தொழில். தனையைக் குரியது தந்தையே உணருவன். இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும். அரசனா யாய்கினும் சரியிம் முடிபு.

-

மேதை - அறிவு. விருத்தமாய் - எதிராக, பகையாக. கலுழுநள் அழுகின்றவள். சாற்றல் சொல்லல். மந்திரத் தலைவர் ஆ லோசனை கூறும் தலைவர், அமைச்சர்.