பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

வெறுப்புள் ளேனும் விடுத்தவ ளொன்றும்

மொழியாள். சம்மதக் குறியே மௌனம். 365 அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள். நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம் முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்?

ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்! 370 வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. (மௌனம்)

ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும்.

(மௌனம்)

375 சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே! எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்! அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர், நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும்

380 உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன. என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்? எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான். கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம் நடுவழி வந்ததும்! விடுகிலம்.

385 கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே.

நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.

LO

5

விடுத்து

வாய்விட்டு. கெடுபயல் பலதேவனைக் குறிக்கிறது.

கொடியன் - நாராயணனைக் கருதிற்று.