பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

301

தேவனுக்கு மணம்செய்ய யோசித்திருப்பதைக் கூறியதும், அதற்கு இளவரசி விரும்பவில்லையானாலும், அரசனுக்கு உள்ள மனத்துன்பத் தையும் நெருக்கடியையும் கருதி, அவனுக்கு மேலும் மேலும் மன வருத்தம் ஏற்படக்கூடாது என்று கருதி திருமணத்திற்கு இசைந்ததும், அரசன் சென்றவுடன் இளவரசி மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டதும், பிறகு நெடுநேரம் கழித்துத் தெளிந்தெழுந்ததும் ஆகியவற்றைப்பற்றிப் பேசுகின்றனர்.

அவ்வமயம், இளவரசி மனோன்மணி நீராடித் திருமணத்திற் குரிய ஆடையணிகளை அணிந்துகொண்டு வாணியுடன் அவ்விடம் வருகிறாள். ஊழியப் பெண்கள் வேறிடம் போகின்றனர். இளவரசி, தான் இரண்டு வரங்களை அரசரிடம் கேட்டுக் கடிதம் எழுதியதாகவும், அவ் வரங்களை அரசர் கொடுத்ததாகவும் கூறுகிறாள். “வாணி, உன்னை நடராசனுக்கு மணம் செய்விக்க அரசர் இசைந் துள்ளார். இதோ, அவர் எழுதிய இசைவுக் கடிதம், பார்” என்று கூறி, இளவரசி, வாணியிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறாள்.

வாணி, கடிதத்தைப் படித்து, “என்ன அம்மா, இது? எனக்கு இது சம்மதம் இல்லை. தாங்கள் மனம் வருந்தியிருக்க, நான் மணம்செய்து இன்புறுவதா? இது முடியாது!" என்றனள்.

66

'என் தந்தையின் மனம்போல நடப்பது என் கடமை இந்த நெருக்கடியில் அவர் இஷ்டம்போல் நடக்காவிட்டால் அவர் பெருந் துயர் அடைவார் என்றாள்” மனோன்மணி.

"தங்களைப் பலதேவனுக்குத் திருமணம் செய்விப்பது பகலுக்கும் இரவுக்கும் உள்ள உறவுபோன்றது. கிளியைக் கழுகுக்கு மணம் செய்விப்பதுபோன்றது. தங்களுடைய பெருந்துயருக்கிடையே என்னுடைய திருமணந்தானா பெரிது?” என்று கூறி மறுத்தாள் வாணி.

!

மனோன்மணி, “வாணி ! வருந்தாதே. என் தந்தைக்கு வந்த துன்பத்தைப் போக்குவதற்காகவே அவருடைய விருப்பப்படி நடந்து அவருக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதற்காகவே இத் திருமணத்தை நான் ஏற்றுக்கொண்டேன். மற்றவர்களின் நன்மைக்காகத் தமது சுகங்களைத் துறப்பதுதான் உண்மையான தவம். உன்னை நடராஜனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்றும், நாராயணரைச் சிறை விடுவிக்க வேண்டும் என்றும் அரசரிடம் கேட்டேன். அவர் அவ்விதமே சம்மதம் தந்தார்” என்று கூறினாள்.