பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
புரு:
குடி:
புரு:
குடி:
60 வந்ததென் இருள்வயின்? வாளிடென் அடியில்!
65
70
75
வெந்திறல் வேந்தநின் வென்றிகொள் பாசறை சேர்ந்துன் அமையம் தேர்ந்து தொழுதுஓர் வார்த்தைநின் திருச்செவி சேர்த்திடக் கருதி வந்தனன் அடியேன்: தந்தது தெய்வம் உன்றன் திருவடி தரிசனம் உடனே! சிந்தையெப் படியோ அப்படி என்செயல்!
செப்புதி விரைவில். செப்புதி வந்தமை!
ஒப்பிலா வீர! எப்புவ னமுநின்
மெய்ப்புகழ் போர்த்துள ததனால், இப்புவி நீவரு முனமே நின்வசப் பட்டுத்
தாவரும் இன்பம் தடையறத் துய்ப்பப் பாக்கியம் பெற்றிலம் பண்டே என்றுனி ஏக்கமுற் றிருந்தமை யானெடு நாளாய் அறிந்துளன். இன்றுநீ ஆற்றிய போரிற் செறிந்திரு படையும் சேர்தரு முனமே
முறிந்தியாம் ஓடிய முறைமையும் சிந்தையிற் களிப்படை யாமலே கைகலந் தமையும்
வெளிப்படை யன்றோ? வேந்த!இப் புவியோர் வெல்லிட மும்வெலா இடமும் யாவும்
80 நல்லவா றறிவர். நாயினேன் சொல்வதென்? வேசையர் தங்கள் ஆசையில் முயக்கம் அன்றோ இன்றவர் ஆற்றிய போர்முறை? என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்! நின்புகழ் மயக்கா மன்பதை உலகம்
85
யாண்டும் இன்றெனில், அணிதாம் இந்தப்
பாண்டியும் நின்பாற் பகைகொளத் தகுமே!
ஒருவா ற்றமே யாயினும், மருவாக்
கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை
311
எப்புவனமும் – எந்த உலகமும். இப்புவி - இந்தப் பாண்டிய தேசம். தாவரும் - கெடுதலில்லாத. உனி - உன்னி, நினைத்து. மயக்கா - மயக்காத மன்பதை - மக்கள். தகுமே - தகுமோ.