பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
ஜீவ:
குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே. பெயரால் என்னை? பேயனிவ் வஞ்சியான் பெயரால் அரசன்! செயலாற் புலையன்!
2-ம் படை: செய! செய! சரிசரி! தெளிந்தோம்! தெளிந்தோம்!
நாரா:
சக:
331
மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா!
இனியெலாம் ஈசன திச்சை.
சரி! சரி!
யாவ:
ஜீவ:
சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே!
வாராய்! நாரணா! ஆனால் அப்புறம்
160 சென்றுநம் மனோன்மணிச் செல்வியை யழைத்து மன்றல் திரைப்பின் வரச்செய்.
சக:
(நாராயணன் போக)
யார்க்கும்
சம்மதம் எனிலிச் சடங்கினை முடிப்போம். வம்மின்! இனியிது மங்கல மணவறை. கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த் 165 திவலை சிதறுமின்! சிரிமின்! களிமின்!
இன்றுநாம் வென்றோம் என்றே எண்ணுமின்! இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி வருமுன் ஏகுவம் அரைநா ழிகைத்தொழில்! ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச. 170 நாளைநல் வேளை: நம்மணி பிறந்தநாள். பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில் ஓரோர் மங்கல விசேடம்!
ஓ! ஓ!
சரி! சரி! ஒவ்வொரு வருடமும் அதிசயம்!
(நாராயணன் திரும்பிவர. மனோன்மணி, வாணி முதலிய தோழியருடன் திரைப்பின் வந்து நிற்க)
தினமணி - சூரியன். நம்மணி - மனோன்மணி.