பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்

மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி

உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்

வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு

ஒள்ளிய சிறுவிர லணியாக்

கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.

ஆசிரியச் சுரிதகம்

அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்

(நேரிசை வெண்பா)

அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே

சுமைநீ பொறுப்பதெவன் சொல்லாய்

நாடகமே செய்ய நயந்தால் அதற்கிசைய

ஆடுவம்வா நாணம் அவம்.

நமையுமிந்த

பாயிரம் முற்றிற்று.

வெண்பா

2-க்கு அடி

8

கலிப்பா

1-க்கு அடி

ஆகப் பாயிரம் 1-க்கு அடி

9151

49

57

பழைய ஏட்டுச் சுவடிகள் முதன்முதல் அச்சுப் புத்தகங்களாக வெளிவந்தன. இதைத்தான் பழம்பணி புதுக்கி என்று கூறினார். குயிற்றுதல் - செய்தல். மீக்கொள - மேற்கொள்ள. இந் நாடகம் இந்த மனோன்மணீயம் என்னும் நாடகம். சிறுவிரல் - தமிழ்த் தெய்வமாகிய உன் சிறுவிரல். கொள்மதி - கொள்க.

அமைய - பொருத்த, அருள் - தெய்வத் திருவருள். ஆட்டுமேல் - ஆட்டுவிக்குமானால். சுமை பொறுப்பது - பாரந் தாங்குவது. எவன் – என்ன காரணம். நமையும் - நம்மையும். நயந்தால் (திருவருள்) விரும் பினால். அவன் - வீண்.