பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

63

மனோ:

இருளில் தனித்துறை யேழையர் தங்கள் மேற் பொருதலோ வீரமென் றாடாய் கழல்

வா:

மனோ:

வா:

மனோ:

போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல்.

எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல் கரிந்தது பதியென் றாடாய் கழல்

கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல். தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத் தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல் உருவங் கரந்தானென் றாடாய் கழல்.

உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால் அரையுரு வானாரென் றாடாய் கழல் அந்நட ராஜரென் றாடாய் கழல்.

(சிரித்து)

(நேரிசை ஆசிரியப்பா)

ஏதடி வாணி! ஓதிய பாட்டில்

3

4

LO

5

6

(பெருமூச்செறிய)

ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து?

நன்று! நன்று! நின் நாணம்,

வா:

மன்றலு மானது போலும்வார் குழலே!

1

LO

5

ஏதம் மாநீ சூது நினைத்தனை?

ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன். இச்சகத் தெவரே பாடினும்,

உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே.

2

பலி கொண்டு - பிச்சை ஏற்று. அம்பலத்தொருவர் -திருச்சிற்றம் பலத்தில் எழுந்தருளிய சிவபெருமான். உடைந்தான்- தோற்றான். கரந்தான் – மறைந்தான். நடராஜர் வாணியின் காதலன் பெயர். மன்றல் – திருமணம். வார்குழல் - நீண்ட கூந்தலையுடையவள். இச்சகம் - இந்த உலகம். உயிர்ப்பு - மூச்சு.