64
மனோ:
வா:
10
15
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
மறையேல்! மறையேல்! பிறைபழி நுதலாய்! திங்கள் கண்டு பொங்கிய கடலெனச்
செம்புனல் பரக்கச் செந்தா மரைபோற் சிவந்தவுன் கபோல நுவன்று, நின்மனக் களவெலாம் வெளியாக் கக்கிய பின்னர் ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய்
காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே.
ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்! எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று திரிபவ ரொப்பநீ செப்பினை!
நான் கண் டேநாள் நாலைந் தாமே.
ஏதடி! நுமது காதல் கழிந்ததோ?
காணா தொருபோ திரேமெனுங் கட்டுரை வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்? காதள வோடிய கண்ணாய்!
ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே.
3
4
LO
5
மனோ:
20
வா:
25
எதனையான் இயம்புகோ! என்றலை விதியே.
(கண்ணீர் சிந்தி)
வா; விளை யாடுவோம் வாராய்.
யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே!
6
மனோ:
30
ஏனிது! ஏனிது வாணீ! எட்பூ
ஏசிய நாசியாய்! இயம்புக.
மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே.
7
―
கபோலம் – கன்னம். நுவன்று - சொல்லி; வெளிப்படுத்தி. இயம்பு - சொல்லு. ‘எருது ஈன்றது என்றால் என்ன கன்று. என்பதுபோல' என்பது பழமொழி. ‘எருது ஈன்றது என்றால் தொழுவத்திலே கட்டு' என்றும் கூறுவர். 'காள பெற்றென்னு கேட்டு கயறெடுத்து' என்பது மலையாளப் பழமொழி.
பிழைத்தவர் - பிழை செய்தவர். எட்பூ – எள்ளின் பூவை. ஏசிய - இழித்துக் கூறிய. நாசி - மூக்கு. எள்ளின் பூவை மகளிரின் மூக்குக்கு உவமை கூறுவது மரபு.