பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவகன்:

குடிலன்:

ஜீவ:

மூன்றாம் களம்

இடம் : கொலுமண்டபம். காலம் : காலை.

(ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.)

LO

5

10

15

(நிலைமண்டில ஆசிரியப்பா)

நமக்கத னாலென்? நன்றே யாமெனத் தமக்குச் சரியாம் இடத்திற் றங்குக.

எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்?

ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக் கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்? குறைவென்? குடில! கூறாய் குறித்தே.

குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ! நறையார் வேப்பந் தாராய்! நமதிடங் கூடல் அன்றெனுங் குறையொன் றுளது. நாடி லஃதலால் நானொன் றறியேன். மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம் ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர் ஏவினர் அஃதொழித் தியற்றின் மிப்புரி. ஆதலா லிங்ஙனம் ஓதினர். அதனை அழுக்கா றென்றுநா மையமற் றறைதல் ஒழுக்க மன்றே. குருவன் றோவவர்?

ஐயரும் அழுக்கா றடைந்தார். மெய்ம்மை

புரிசை - கோட்டை. நறை ஆர் - தேன் பொருந்திய. வேப்பந் தாராய் வேப்பமாலை பாண்டியருக்கு உரியது. ஓவல் இலாதே - ஓய்வு இல்லாமல். உஞற்று - செய். புரி - நகரம். அழுக்காறு - பொறாமை.