பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
20
25
கண்டு காமங் கொண்டவ ளல்லள்;
பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள். அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும்; பலதே வனையவள் இடமே பலமுறை யேவி லுடன்படல் கூடும். கூடிலென் கூடா?
91
யாவன் அஃதோ வருமொரு சேவகன்?
(சேவகன் வர)
சேவகன்:
ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திரா?
(திருமுகம் கொடுக்க)
குடி:
(வாசித்து நோக்கி)
நல்ல தப்புறம் நில்லாய்; ஓ! ஓ!
சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம்
(சேவகன் ஒருசாரிருந்து தூங்க)
30 அடுத்தது போலும் இம்மணம், அவசியம்
35
நடக்கும். நடக்கிலென்? நமக்கது நன்றே. அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்; பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள்
வாழான் வழுதி, வஞ்சி நாட் டார்க்குத் தாழார் இந்நாட் டுள்ள ஜனங்களும். அதுவும் நன்றே - ஆயினுங்
கால தாமதஞ் சாலவு மாகும்;
வேறோரு தந்திரம் வேண்டும்; ஆ! ஆ! மாறன் மாண்டான்; மன்றலும் போனது; 40 சேரன் இறுமாப் புடையதோர் வீரன் ஆமெனப் பலரும் அறைவர். அதனால் நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன் மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற் படைகொடு வருவன்; திண்ணம். பாண்டியன்
―
―
கொண்டு
விழைந்தனள் விரும்பினாள். வழுதி பாண்டியன். மாறன் பாண்டியன். இறுமாப்பு செருக்கு. கொடுவருவன் வருவான். திண்ணம் - உறுதி.