பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

இலாகாவும், மத்திய அரசாங்கத்து ஆர்க்கியாலஜி இலாகாவும் இணைந்து ஒன்று சேர்ந்து இதில் முயல்வார்களானால் பயன் காணக்கூடும்.

தமிழ்நாட்டு ஆர்க்கியாலஜி இலாகாவும் மத்திய அரசாங்கத்து ஆர்க்கியாலஜி இலாகாவும் (எபிகிராபி இலாகாவும் உட்பட) கோயில்களிலுள்ள கல்வெட்டெழுத்துகளையும், தரைக்குமேலே காணப்படுகிற கல்வெட்டெழுத்துகளையும் மட்டும் கண்டு பிடித்துக் கொண்டிருப்பது போதாது. தரைக்குள் புதைந்து கிடக்கிற வீரக்கல் போன்றவற்றையும் அகழ்ந்தெடுத்து வெளிப்படுத்த வேண்டும். பெயரளவில் மட்டும் செயலாற்றாமல் சுறுசுறுப்பாக முயற்சியோடு செயலாற்ற வேண்டும். “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?"