பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-5

என் ஆசான் மறைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூல் வெளிவந்தாலும், இஃது இன்று மிகவும் பயன்படுவதாக உள்ளது. இதனைத் தனிப்பட்ட ஊக்கம் மேற்கொண்டு தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அழகாக வெளியிட்டிருக்கிறது. கழகப் பொது மேலாளர் (General Manager) அறிஞர் இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் இதற்காகப்பட்ட துன்பங்கள் அதிகம்; அவருக்கு நான் மிகுதியும் கடமைப் பட்டவன். இப்படி மயிலை சீனி. அவர்கள் வெளியிடாது விடுத்துச் சென்ற நூல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும். தமிழ்மக்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டு பாரில் ஓங்கியுயர வேண்டும் என்கிற விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டு முடிக்கிறேன். வணக்கம்.

சென்னை -1

23-11-81

ஊ. ஜயராமன்

(கொற்றன்காரி)