பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

உண்டன்றோ? ஆண் மகன் அடைகிற அளவிலா ஐம்புல இன்பத் ண் துக்கு பெண் மகள் நிலைக்களமாக இருப்பது போலவே. பெண் மகள் அடைகிற அளவிலா ஐம்புல இன்பத்துக்கு ஆண் மகன் நிலைக் களமாக இருக்கிறான் என்பது சொல்லாமலே அமையும். இது பௌத்த மத நூலில் தெளிவாகவும் விரிவாகவும் கூறுப்படுகிறது. திருவள்ளுவர் வாழ்ந்திருந்த காலத்துக்கு சில நூற்றாண்டுக்கு முன்பு இருந்தவர் பகவன் புத்தர் அவர், சிற்றின்பம் பொருளாகக் கூறியுள்ள அறிவுரை இந்தக் குறட்பாவுக்கு நல்லதோர் விரிவுரை போலக் காணப்படுகிறது.

பௌத்த மத வேதமாகிய திரிபிடகத்தில் சூத்திரபிடகம் என்பதும் ஒன்று. சூத்திரபிடகத்தில் அங்குத்தரநிகாயம் என்னும் பகுதியில் ஏக நிபாதம் என்னும் பிரிவில், ஐம்புலன்களின் வாயிலாக ஆணும் பெண்ணும் அடைகிற சிற்றின்பம் விளக்கப்படுகின்றது சாவத்தி (சிராவத்தி) நகரத்திலே அநாத பிண்டிகனுடைய தோட்டத்திலே ஜேதவன ஆரா மத்திலே பகவன் புத்தர் தங்கியிருந்தபோது ஒரு நாள் அவர் தம் முடைய பிக்குச் சங்கத்துக்கு இது பற்றிக் கூறினார். அவர் கூறியது இது.

துறவிகளே! ஆணின் மனத்தை மயக்கிக் கவர்ந்து கொள்கிற பெண்ணின் உருவம் போன்ற வேறு உருவத்தைக் காண்பது இல்லை, பெண்ணின் உருவம் ஆண் மகனுடைய மனத்தைக் கவர்ந்து ஈர்க்கிறது.

துறவிகளே! ஆண் மகனின் மனத்தை மயக்கிக் கவர்ந்து கொள்கிற பெண்ணின் குரல் போன்ற வேறு எந்தக் குரலையும் காணவில்லை. பெண்ணின் குரல் ஆண் மகனுடைய மனத்தைக் கவர்ந்து கொள்கிறது.

துறவிகளே! ஆணின் மனத்தைக் கவர்ந்து கொள்கிற பெண் ணினுடைய மனம் போன்று வேறே எந்த மனத்தையும் கண்டது இல்லை. பெண்ணினுடைய மனமானது ஆணின் மனத்தைக் கவர்ந்து கொள்கிறது.

துறவிகளே! ஆண் மகனின் மனத்தைக் கவர்ந்து கொள்கிற பெண்சுவை போன்று வேற இனிமையான சுவையைக் கண்டது இல்லை. பெண் சுவை ஆணின் மனத்தைக் கவர்ந்து கொள்கிறது.

துறவிகளே! ஆண் மகனின் மனத்தைக் கவர்ந்து கொள்கிற பெண்ணின் ஊறுணர்ச்சியைப்போல (உடலுணர்ச்சியைப் போல) வேறு சிறந்த உடலுணர்ச்சியைக் கண்டது இல்லை. பெண்ணின் ஊறுணர்ச்சி ஆண் மகனின் மனத்தைக் கவர்ந்து கொள்கிறது.

துறவிகளே! பெண்ணின் மனதைக் கவர்ந்து கொள்கிற ஆண் மகனின் உருவம் போன்று வேறு எந்த உருவத்தையும் காணவில்லை. ஆண் உருவம் பெண்ணின் மனசைக் கவர்ந்து கொள்கிறது.