பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

241

வைணவ கலகங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். கலகத்தை யடக்குவதற் காக, அதற்கு முதல் காரணராயிருந்த ஆழ்வாரை நாடு கடத்தியிருக் கலாம். இவ்வாறு இவரை நாடு கடத்திய பல்லவ அரசன் மாமல்லனான நரசிம்மவர்மனாகத்தான் இருக்க முடியும். இதனாலும், திருமழிசை யாரும் மற்ற மூன்று ஆழ்வார்களும் நரசிம்மவர்மன் காலத்தவர் என்பது தெரிகிறது.

IV

இதுகாறும் ஆராய்ந்தவற்றால் பொய்கை பூதம் பேய் திருமழிசை என்னும் ஆழ்வார்கள் நால்வரும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலே மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்திலே இருந்தவர்கள் என்பது தெரிகிறது.

திரு. மு. இராகவையங்கார் அவர்கள் இவ்வாழ்வார்கள் கி.பி. 5- ஆம் நூற்றாண்டு முதல் 7-ஆம் நூற்றாண்டுவரையில் இருந்தவர்கள் என்று கூறுகிறார்:-

“இதுவரை கூறியவற்றால் முதலாழ்வார் மூவரும் திருமழிசை யாழ்வாரும் 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை வாழ்ந்த பேரடியார்கள் என்பது ஒருபடியாகத் தெரியலாம்”19 என்றும்,

66

"முதல் நந்திவர்மன் (கி.பி. 534), சிம்ம விஷ்ணு (கி.பி. 590) போன்ற பரம பாகவதரான அரசர்கள் தாட்சியில் பூதத்தாழ்வார் போன்றவர் களும், மகேந்திரவர்மனான குணபரன தாட்சியில் திருமழிசை யாழ்வாரும் விளங்கியவர்கள் என்ற என் கருத்து எவ்வகையினும் பொருந்துவதாதல் அறிந்து கொள்ளத்தக்கன. என்றும் கூறுகிறார்.

9920

இவர் கூறும் காலம் ஏற்கத்தக்கதல்ல, பூதத்தாழ்வார் தமது பாடலில் மாமல்லையைப் பாடியிருப்பதால், அவர் மாமல்லன் நரசிம்ம வர்மன் காலத்தவர் என்பதையும் அவருடன் நண்பர்களாக இருந்த மற்ற பேயாழ்வார் பொய்கை யாழ்வார் திருமழிசை யாழ்வார்களும் இவ் வரசன் காலத்தில் இருந்தவர்கள் என்பதையும் மேலே விளக்கினோம். இராக வையங்கார் அவர்கள் தமது ஆராய்ச்சி முடிவை உறுதியாகக் கூறாமல் வழ வழவென்று நெகிழ்த்திக் கொண்டே போகிறார். முதலில் இவர் பொய்கையாழ்வாரைக் களவழி நாற்பது நூலின் தலைவனாகிய செங்கட் சோழன் காலத்தவர் என்று கூறினார். செங்கட் சோழன் காலம்