248
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6
முன்னுலகம் உண்டுமிழ்ந்தாய்க் கவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதன்றே என்னே!
-
திருமாலே! செங்கண் நெடியானே! எங்கள்
பெருமானே! நீ இதனைப் பேசு.
2
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் - தானே
எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத் திருசுடரு மாய இறை.
3
இறையாய் நிலனாகி எண்திசையும் தானாய்
மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான் உள்ளத்தி னுள்ளே உளன்.
4
தாழ்சடையும் நீள்முடியும் ஒள்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும் திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்கு இரண்டுருவ மொன்றா யிசைந்து.
5
இனியவன் மாயன் எனஉரைப்ப ரேலும்
இனியவன் காண்பரிய னேலும்
-
இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்
உள்ளத்தி னுள்ளேஉளன்.
அதுநன் றிதுதீதென் றையப்ப டாதே
மதுநின்ற தண்துழாய் மார்வன் -பொதுநின்ற பொன்னங் கழலே தொழுமின் முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து.
உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி வைத்தவனை நாடி வலைப்படுத்தேன்
-
மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து.
அலரெடுத்த உந்தியான் ஆங்கெழி லாய
மலரெடுத்த மாமேனி மாயன் - அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான் வார்சடையான் என்றிவர்கட் கெண்ணத்தா னாமோ? இமை.
9
00
6
7