250
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6
தேவராய் நிற்கும்அத் தேவும்அத் தேவரில் மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும் யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார் கற்கின்ற தெல்லாம் கடை.
உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி
—
செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது.
தமராவார் யாவர்க்கும் தாமரை மேலாற்கும் அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி மால்வண்ணன் தாள்தா மரையடைவோ மென்று.
இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை
-
இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.
7
00
9
10
கீழ்க்கண்ட செய்யுட்கள் திருமழிசையாழ்வார் இயற்றிய
திருச்சந்த விருத்தத்திலிருந்து எடுத்தவை:-
பூநிலாய ஐந்துமாய்ப் புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய முன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய் மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணம்நின்னை யார்நினைக்க வல்லரே.
1
ஒன்றிரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய் ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய் ஒன்றிரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினானும் உன்னைஏத்த வல்லனே.
2
விண்கடந்த சோதியாய் விளங்குஞான மூர்த்தியாய் பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே
எண் கடந்த யோகினோ டிரந்துசென்று மாணியாய்
மண்கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.
3