பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

157

சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. குகையின் உள்ளே அரை வட்டமாகக் கூரைமேல் அமைந்துள்ள பாறையில் தனித் தனியாக அமைந்த ஐந்து உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதல் உருவம் நான்கு கு கைகளையுடைய யட்சி உருவம், சிங்கத்தின்மேல் அமர்ந்து ஒரு கையில் வில்லையும், மற்றொரு கையில் அம்பையும், ஏனைய கைகளில் வேறு ஆயுதங்களையும் பிடித்திருக்கிறது. இந்த யட்சிக்கு எதிரில் யானையின் மேல் அமர்ந்துள்ள ஆண் உருவம் கையில் வாளையும், கேடயத்தையும் பிடித்திருக்கிறது. இது சாஸ்தா உருவம் போலும். இதையடுத்துத் தனித்தனியே மூன்று தீர்த்தங்கரர் களின் உருவங்கள் முக்குடை களுடன் செதுக்கப்பட்டுள்ளன. இருந்த திருமேனிகள் கடைசியாகப் பதுமாவதி என்னும் இயக்கியின் உருவம்' வலதுகாலைத் தொங்கவிட்டு இடதுகாலை மடக்கிச் சுகாசனத்தில் அமர்ந் திருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து சிற்பங்களில் நடுவில் உள்ள மூன்று தீர்த்தங்கரரின் உருவங்களுக்குக் கீழே மூன்று வட்டெழுத்துச் சாசனங்கள் (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டுள்ளன.

கிழக்கே

செட்டிப்பொடவுக்குக் சமணமலையில் பேச்சிப்பள்ளம் என்னும் இடம் இருக்கிறது. இது குன்றின் மேல் இருக்கிறது. இங்கு வரிசையாகப் பாறையில் சமண தீர்த்தங் கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த உருவங் களின் கீழே வட்டெழுத்துச் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை கி.பி. 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.

பேச்சிப்பள்ளத்திற்கு அப்பால் குன்றின் மேலே அழிந்து போன ஒரு கோயில் காணப்படுகிறது. இக் கோயிலின் தரை யமைப்பு மட்டுந்தான் இப்போது உள்ளன. இங்கு 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முற்றுப் பெறாத வட்டெழுத்துச் சாசனம் உண்டு.

இந்த இடத்துக்கு மேலே குன்றின் மேல் பாறையில் விளக்கு ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்குப் பாறைக்கு அருகில் கன்னட எழுத்துச் சாசனம் காணப்படுகிறது. இதன் கடைசிவரி மட்டும் தமிழாக உள்ளது. இந்தச் சாசனம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.