பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள்

662

-

சமணம்

39

உயிருள்ள பொருளாயிருந்தாலும், உயிரற்ற பொருளா யிருந்தாலும், சிறியதாயினும், பெரியதாயினும், எல்லாப் பொருள் களையும் துறந்து அவற்றின் தொடர்பை நீக்கிக் கொள்கிறேன்; இதனை மனம், மொழி, மெய்களால், முக்காலத்திலும் செய்ய உறுதி கூறுகிறேன்,” என்று கூறி றி இந்த ஐந்தாவது மாவிரதத்தைச் சமண முனிவர் மேற்கொள்கிறார்.

இந்த ஐந்து மாவிரதங்களைப் பற்றிச் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

66

“ஐவகைப் பொறியும் வாட்டி, ஆமையின் அடங்கி, ஐந்தின் மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்கும் நின்றெரிய விட்டுப் பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச் செய்தவம் நுனித்த சீலக் கனைகதிர்த் திங்கள் ஒப்பார்

(சிந்தாமணி, 2834.)

"கோறல் பொய்த்தல் கொடுங்களவு நீக்கிப் பிறர்மனைகள்மேல் சேற லின்றிச் செழும்பொருண்மேல் சென்ற சிந்தை வேட்கையினை ஆறுகிற்பின் அமருலகம் நுங்கட் கடிய தாமென்றான் நீறும் ஓடும் நிழன்மணியும் பொன்னும் நிகரா நோக்குவான்

சமிதிகள் ஐந்து :

(நீலகேசி, 40)

1. இரியை. 2. பாஷை. 3. ஏஷணை. 4. ஆதான நிக்ஷேபனை. 5. உத்சர்க்கம் என்பன. இவற்றை விளக்குவாம்.

1. இரியா சமிதி :

وو

சமணத்துறவி, நடக்கும்போது தரையை மூன்றுமுழ தூரம் பார்த்துப் புழுபூச்சிகள் இருந்தால் அவற்றை மிதிக்காமல் நடத்தல் வேண்டும். “நூற்கதி கொண்டு கண்ணால் நுகத்தள வெல்லை நோக்கி, நடக்கவேண்டும் என்றார் சிந்தாமணி ஆசிரியர். கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டவர். ஆதலால் எறும்பு, புழு, பூச்சி முதலிய சிற்றுயிர்களும், நடக்கும் போது காலினால் மிதிபட்டிறவாதபடி விழிப்பாகத் தரையைப் பார்த்துச் சமணத் துறவி நடக்க வேண்டும். இது பற்றியே அவர் இராக்காலங்களில் பிரயாணம் செய்யார். வழியில் உள்ள சிற்றுயிர்கள் காலில் மிதிபடாதபடி ஒதுக்குவதற்காக மயிற்பீலிக்