பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

அப்போது பகவன் புத்தர், “உண்மையாகவே பிக்கு கொண்டஞ்ஞர் இதை அறிந்துகொண்டார்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதுமுதல் பிக்கு கொண்டஞ்ஞருக்கு அஞ்ஞா கொண்டஞ்ஞர் (ஞானம் பெற்ற கொண்டஞ்ஞர்) என்னும் பெயர் ஏற்பட்டது.

இரண்டாம் நாள் வப்ப முனிவரும், மூன்றாம் நாள் பத்திய முனிவரும், நான்காம் நாள் மகாநாம முனிவரும் ஐந்தாம் நாள் அஸ்ஸஜி முனிவரும் தர்மோபதேசம் கேட்டு ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார்கள். இவர்கள் புத்தரிடம் பிக்கு ஆனார்கள். பகவன் புத்தர் அவர்களை நோக்கி, "பிக்குகளே! இங்கு வாருங்கள்: தர்மம் நன்றாக உபதேசிக்கப்பட்டது. எல்லாத் துன்பங்களையும் அழித்து, உயர்நிலை பெறுவதற்காகச் சுத்தமான பிரமசரியத்தை அனுசரிப்பீர்களாக!” என்று கூறி அவர்களைச் சங்கத்தில் சேர்த்தார். அப்போது இந்த ஆறுபேர்களே பௌத்தமதத்தில் இருந்தார்கள்.

பிறகு ஒரு நாள், பகவன் புத்தர் கொண்டஞ்ஞர் முதலாக ஐந்து பிக்குகளுக்கு அனாத்ம இலக்கணச் சூத்திரத்தை உபதேசம் செய்தார். அதன் சுருக்கம் வருமாறு:- "பிக்குகளே! ரூபம் (உடம்பு) ஆன்மா அல்ல. நமக்கு உள்ள இந்த உருவம் ஆன்மாவாக இருந்தால், இதற்கு வியாதிவரக் கூடாது. எல்லோரும் தங்கள் உருவத்தைப் பற்றி இப்படி இருந்தால் நல்லது; இப்படி இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அவரவர் நினைப்பது போல உருவம் அமைவது இல்லை.

வேதனை ஆன்மா அல்ல. சஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்பவைகளும் ஆன்மா அல்ல என்பதைப் பற்றியும் தேகத்தைப் பற்றிக் கூறியது போலவே விளக்கிக் கூறினார். பிறகு பகவன் புத்தர் பிக்குகளைப் பார்த்து, "பிக்குகளே! உருவம் (உடம்பு) நித்தியமா, அநித்தியமா? நிலைபெற்றிருப்பதா, அழிந்து விடுவதா?” என்று

வினவினார்.

பிக்குகள், “தேகம் (உருவம்) அநித்தியமானது; அழிந்துவிடக் கூடியது” என்று விடை கூறினார்கள்.

99

பகவன் புத்தர்:

“அநித்தியமான, அழிந்துவிடுகிற பொருள் துக்கத்தைத் தருமா, சுகத்தைத் தருமா?”