பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

பிக்குகள்:

-

“பகவரே! அது துன்பத்தைத் தருவது.

பகவன் புத்தர்:

وو

"ஒரு பொருள்

அநித்தியமானதாகவும்

105

துன்பத்தைக்

கொடுக்கிறதாகவும், மாறுதல் அடைந்து கொண்டிருக்கிறதாகவும் இருந்தால் அதைக் கண்டு 'இது நான், இது என்னுடையது, இது நானே’ என்று நினைப்பது சரியா?”

பிக்குகள் :

“அப்படி நினைப்பது சரியல்ல”

பின்னர் வேதனை, சஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்கிற மற்ற நான்கு ஸ்கந்தங்களைப் பற்றியும் பகவன் புத்தர் மேற்கண்டபடி கேள்விகள் கேட்க, பிக்குகள் மேற்கண்டபடி விடை கூறினார்கள். அப்போது பகவன் புத்தர் அருளிச்செய்தார்: "ஆகையினாலே, பிக்குகளே! இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் முக் காலத்திலும் அகத்திலும் புறத்திலும் கம்பீரத் துடனும் கம்பீரம் இல்லாமலும் தாழ்ந்ததாகவும் உயர்ந்ததாகவும் அண்மையிலாயினும் சேய்மையிலாயினும் ஏதாவது ஒரு உருவம் (தேகம்) இருந்தால், அது நான் அன்று, அது என்னுடையதன்று, அது என்னுயிர் அன்று என்று நன்றாகவும் சரியாகவும் அறிவினால் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.’

இவ்வாறே வேதனை, ஸஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்கிற நான்கைப் பற்றியும் நன்றாகவும் சரியாகவும் அறிவினால் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.’

“பிக்குகளே! இப்படி ஆராய்ந்து பார்க்கிற அறிவு பெற்றவர்கள் ரூபத்தைப் பற்றியும் வேதனையைப் பற்றியும் சம்ஸ்காரத்தைப் பற்றியும் விஞ்ஞானத்தைப் பற்றியும் இவ்வாறு ஆராய்ந்து பார்த்து உண்மையைக் காண்பார்கள். உண்மையைக் கண்டவர்கள் ஆசையை விட்டுவிடுவார்கள். ஆசையை அறுப்பதினாலே, கிலேசங்களில் (துன்பங்களில்)இருந்து நீங்கிய மனத்தைப் பெறுவார்கள். அவ்வாறு மன மாசு நீங்கியவர்கள் அனாத்மவாத அறிவைப்பெற்று, செய்யவேண்டிய நன்மைகளையெல்லாம் செய்து முடித்தேன். இனி எனக்கு மறுபிறப்புக் கிடையாது. இந்த அர்ஹந்தாவைப் பற்றிச் செய்யவேண்டியது வேறொன்றுமில்லை" என்று ஞானக் கண்ணாலே அறிந்து கொள்வார்கள்.