பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

பகவன் புத்தருடைய இந்தப் போதனையைக் கேட்ட போது ஐந்து பிக்குகளும் எல்லாவித கிலேசங்களையும் வென்று அர்ஹந்த பலனை அடைந்தார்கள்.

நாலக சூத்திரம்

பிறகு ஒரு நாள் நாலக முனிவர் பகவன் புத்தரிடம்வந்தார். இந்த நாலக முனிவர், புத்தர் குழந்தையாயிருந்தபோது தீர்க்க தரிசனம் கூறின அசித முனிவரின் மருகன். அசிதமுனிவரின் ஆணைப்படி, துறவு பூண்டு இமயமலைச் சாரலில்சென்று தவம் செய்திருந்தார். சித்தார்த்த குமரன் புத்த பதவி யடைந்திருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம் உபதேசம் பெறுவதற்காக நாலக முனிவர் இமய மலையிலிருந்து பகவன் புத்தரிடம் வந்தார். வந்து வணங்கி அவரிடம் உபதேசம் கேட்டார். பகவன் புத்தர், நாலக முனிவருக்கு மோனெய்ய விரதத்தை உபதேசித்தார். (இந்த உபதேசத்தைச் சூத்திர பிடகத்திலே நாலக சூத்திரத்தில் காணலாம்.) இவ்வுபதேசத்தைப் பெற்ற நாலக முனிவர் மீண்டும் இமய மலைக்குச் சென்று, பகவன் புத்தர் உபதேசப்படி இருந்து ஏழு திங்களுக்குப் பிறகு உயர்ந்த நிலையைப் பெற்றார்.

யசபுத்திரனுக்கு உபதேசித்தல்

அக்காலத்திலே காசி நகரத்திலே மிக்க செல்வந்தனான தனபதி யின் மகன் யசகுலபுத்திரன் இன்பசுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் விடியற்காலையில் விழித்துக் கொண்டு பார்த்த போது மகளிரின் இருப்பைக்கண்டு, சித்தார்த்த குமரன் இல்லறத்தில் வெறுப்புக்கொண்டது போல, வெறுப்புக் கொண்டு மாளிகையைவிட்டுப் புறப்பட்டுவந்தான். வந்தவன் புத்தர் எழுந்தருளி யிருக்கும் இசிபதனத்தை அடைந்தான். அப்போது விடியற்காலம் ஆகையால் பகவன் புத்தர் ஆசனத்தில் அமர்ந்து ஞானக்கண்ணி னாலே உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். யசகுல புத்திரன் வரப் போவதையும் வந்து அறநெறி கேட்டுத் துறவுகொள்ளப் போவதையும் அறிந்தார்.

அப்போது யசகுல புத்திரன் பகவரிடம் வந்து வணங்கினான். பகவர் அவனை உட்காரச் சொல்ல அவனும் அமர்ந்தான். அவனுடைய பக்குவ நிலையை யறிந்த பகவர் தானங் கொடுப்பதனாலும் சீலம் அனுஷ்டிப்பதனாலும் கிடைக்கும் பயன்களையும் இவற்றினாலே