பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

31

சித்தார்த்த குமாரனுடைய திறமையையும் நுட்ப அறிவையும் கண்ட சாந்திதேவர் அவரைப் புகழ்ந்து வியந்தார். “இளைஞ ராகிய இவர் தமக்குத்தாமே இவ் வித்தைகளை யெல்லாம் கற்றுத் தேர்ந்தது வியப்பானது. கற்றது மட்டும் அல்லாமல் மற்றவர்களை விடத் திறமை சாலியாக இருப்பது அதனினும் வியப்பானது” என்று கூறி மகிழ்ந்தார். சித்தார்த்தரின் அருள் உள்ளம்

சித்தார்த்த குமாரனுடைய சாத்திரக் கல்வியும் படைக்கலக் கல்வியும் பன்னிரண்டு வயதில் முற்றுப்பெற்றன. பிறகு, குமாரன் மற்ற இளைஞருடன் சேர்ந்து குதிரை யானை சவாரி செய்தல் வேட்டை யாடல் முதலிய விளையாட்டுகளில் காலங் கழித்தார்.

ஒருநாள் இவர்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆகாயத்திலே அன்னப் பறவைகள் வேகமாகப் பறந்து போவதைக் கண்டார்கள். அப்போது தேவதத்தன் என்னும் சிறுவன், தனது வில் வித்தையின் நுட்பத்தைக் காட்ட விரும்பி, வில்லில் அம்பை வைத்துக் குறிபார்த்து ஒரு பறவையை எய்தான். பறவையின் இறக்கையில் பட்ட அம்பு ஊடுருவிப் போகாமல் சிறகிலேயே தைத்துக் கொண்டது. உடனே பறவை சிறிது தூரத்திற்கப்பால் தோட்டத்தில் விழுந்தது. பறவை கீழே விழுந்ததைக் கண்ட சித்தார்த்த குமாரன் ஓடிச் சென்று பறவையைத் தமது இரண்டு கைகளினாலும் அன்புடன் எடுத்து அப் பறவை படும் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தினார். பிறகு தரையில் உட்கார்ந்து அதை மெல்ல மடியின்மேல் வைத்துக்கொண்டு சிறகில் பொத்திக் கொண்டிருந்த அம்பை மெதுவாக வெளியே எடுத்தார். பிறகு புண்ணில் தைலம் தடவி அதற்குத் தீனி கொடுத்துக் காப்பாற்றினார். சில நாட்களில் பறவையின் புண் ஆறி நலம் அடைந்தது.

தேவதத்தன், சித்தார்த்த குமாரனிடம் சிலரை அனுப்பி அன்னப் பறவையைத் தன்னிடம் சேர்ப்பிக்கும்படிக் கேட்டான். அவர்கள் வந்து, “தேவதத்தன் அம்பு எய்து அன்னப் பறவையை வீழ்த்தினார். அப் பறவை உமது தோட்டத்தில் விழுந்தது. அதைத் தரும்படிக் கேட்கிறார்" என்று கூறினார்கள்.

66

சித்தார்த்த குமாரன் அவர்களுக்கு இவ்வாறு விடை கூறினார்: 'அம்பு தைத்த அன்னப் பறவை இறந்து போயிருந்தால், அது திருப்பிக் கொடுக்கப்படவேண்டும். அது இறந்து போகாமல் உயிருடன் இருப்பதால் அது அவருக்குரியதன்று.