பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

75

மற்றொரு பாத்திரத்தை மூடி அதைத் தானே தன் தலைமேல் வைத்துக் கொண்டு ஆலமரத்திற்கு வந்தாள். அவளுடன் அவளுடைய பணிப் பெண்ணும் மற்றத் தோழிப் பெண்களும் வந்தார்கள்.

தூரத்திலிருந்து பார்க்கும்போதே, அஜபால ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் போதிசத்துவரைச் சூழ்ந்து ஒருவிதமான தெய்வீக ஒளி காணப்பட்டதைச் சுஜாதை கண்டாள். கண்டு, வியப்புடனும் பக்தி யுடனும் அவரை அணுகி, அவர் முன்பு பாயசப் பாத்திரத்தை வைத்து வணங்கினாள். “சுவாமி! இந்தப் பாயசத்தை இப் பாத்திரத்தோடு தாங்கள் ஏற்றுக்கொண்டருளவேண்டும். அடி யேனுடைய எண்ணம் நிறைவேறியது போன்று தங்களுடைய உள்ளக் கோரிக்கையும் நிறை வேறுவதாக” என்று கூறி அவரை மும்முறை வலம் வந்து வணங்கி வீடு சென்றாள்.

சுஜாதை போன பிறகு கௌதம முனிவர் பாயசப் பாத் திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நேரஞ்சர ஆற்றங்கரைக்குச் சென்றார். சென்று சுப்பிரதிஷ்டை என்னும் பெயருள்ள துறையருகில் ஒரு மாமரத்தின் கீழே பாத்திரத்தை வைத்துவிட்டுத் துறையில் இறங்கி நீராடிக் கரைக்கு வந்து சீவர ஆடையை அணிந்து கொண்டார். பின்னர் மர நிழலிலே அமர்ந்து பாயசத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக நாற்பத் தொன்பது சிறு சிறு கவளங்களாக உட்கொண்டார். பிறகு, "நான் புத்த பதவியை யடைவது உறுதியானால், இந்தப் பாத்திரம் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லட்டும்” என்று தமக்குள் கருதிக்கொண்டு அந்தப் பாத்திரத்தை ஆற்று நீரிலே வீசி எறிந்தார். நீரிலே விழுந்த அந்தப் பாத்திரம் நீரோட்டத்தை எதிர்த்துச் சிறிது தூரம் சென்று பிறகு கிறுகிறு வென்று சுழன்று நீரில் அமிழ்ந்து விட்டது. இதைக்கண்ட போதிசத்துவர் தமக்குப் புத்த பதவி கிடைப்பது உறுதி என்று அறிந்து கொண்டார்.

பிறகு போதிசத்துவர், அழகுவாய்ந்த புனிதமான பத்திரவனம் என்னும் இடத்திற்குச் சென்றார். அந்த வனத்திலே சால மரங்கள் பசுமையான இலைகளுடனும் நறுமணமுள்ள மலர்களுடனும் இனிய காட்சியளித்தன. இச்சோலைக்குச் சென்ற போதி சத்துவராகிய கௌதம முனிவர், தாம் முன்பு ஆளாரர், உத்ரகர் என்னும் தாபசர்களிடம் கற்ற எட்டு சமாபத்திகளாலும் ஐந்து அபிஞ்ஞை களாலும் ஆறு ஆண்டுக ளாகத் தாம் செய்துவந்த அப்பிரணத்தி