பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

/ 85

இவ்வாறு இரவு முழுவதும் யோகத்திலிருந்து கிலேசங்களை யெல்லாம் வென்று மிகவுயர்ந்த மேலான சம்புத்த பதவியை யடைந்தார்.

முதல்வாரம்

அடைதற்கரிய புத்த பதவியை யடைந்த ததாகதர், தாம் பிறவித் துன்பத்திலிருந்து வீடு பெற்றதையும், கிடைத்தற்கரிய புத்த பதவி கிடைக்கப் பெற்றதையும், அறநெறியை ஐயமறக் காணப்பெற்றதையும். அறநெறியை மக்களுக்குப் போதித்து அவர்களைத் துன்பங்களி லிருந்து நீக்கும் ஆற்றல் பெற்றிருப் பதையும் சிந்தித்துப் பார்த்து அதனாலே மகிழ்ச்சி யடைந்து இவ்வாறு உதானம் கூறினார்.2

"பிறப்பு இறப்பாகிய சம்சாரம் எப்போதும் துன்பமானது. உடம் பாகிய வீட்டைக் கட்டும் திருஷ்ணை என்று சொல்லப்பட்ட கொல் லனைக் காண்பதற்காக, போதிஞானம் என்னும் கண்ணைப் பெறும் பொருட்டு, இதுவரையில் நூறாயிரக் கணக்கான பிறப்புக்கள் பிறந்தேன். கடைசியாக, ஓ! கொல்லனே, உன்னைக் கண்டுபிடித்தேன். நீ இனிமேல் எனக்கு உடம்பாகிய வீட்டைக் கட்டமாட்டாய். (பிறப்பு இறப்பு இல்லை) உன் னுடைய கிலேசம் என்னும் வலிச்சல்கள் உடைக்கப்பட்டன. பேதைமை என்னும் கைத்துண்டுகள் பிளக்கப்பட்டன. என்னுடைய மனம் நிர்வாண மோக்ஷம் அடைந்தது. ஆகையால் ஆசையற்ற அர்ஹந்த பலனையடைந்தேன்.”

இவ்வாறு உதானம் உரைத்த பின்னர் ததாகதர், "இந்தப் பர்யங்கத் திற்காக (பர்யங்கம் - ஆசனம். புத்த பதவி) நான்கு அசங்கிய கல்ப காலம் பிறவி எடுத்துவந்தேன். நான் அடையப் பெற்ற இந்த ஆசனம் (நிலை) வெற்றியாசனம்; மங்கல ஆசனம். நான்குவிதமான வீரியங்களை மனத்திலே நிறுவி இங்கு அமர்ந்து புத்த பதவி யடையப் பெற்றேன்" என்று நினைத்தவண்ணம் ஒரு வாரம் வரையில் அங்கேயே தங்கி விமுக்தி சுகத்தைத் துய்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு, அந்த வாரத்தின் கடைசி நாளாகிய ஏழாவது நாள் இரவில், முதல் யாமத்திலே, பன்னிரண்டு நிதானங்களை முதலிலிருந்து கடைசிவரையில் இவ்வாறு தனக்குள் நினைத்தார்:

பேதமை சார்வாச் செய்கை யாகும் செய்கை சார்வா வுணர்ச்சி யாகும்