பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

உணர்ச்சி சார்வா வருவுரு வாகும்

அருவுரு சார்வா வாயி லாகும்

வாயில் சார்வா வூறா கும்மே

ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும் நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும் வேட்கை சார்ந்து பற்றா கும்மே பற்றில் றோன்றுங் கருமத் தொகுதி கருமத் தொகுதி காரண மாக

வருமே யேனை வழிமுறைத்தோற்றம் தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்காடு அவலம் அரற்றுக் கவலைகை யாறெனத் தவலில் துன்பந் தலைவரும் என்ப ஊழின்மண் டிலமாச் சூழுமிந் நுகர்ச்சி3

இவ்வாறு ஊழின் மண்டிலமாகப் பன்னிரண்டு நிதானங்களைத் தமது மனத்திலே சிந்தித்துப் பார்த்த பகவன் புத்தர் அந்த இரவின் முதல் யாமத்தின் இறுதியிலே இவ்வாறு உதானம் உரைத்தார்:

'பிறப்பு இறப்பாகிய துன்பத்தை நீக்கக் கருதி ஊக்கத்தோடு முயற்சி செய்கிற யோகி ஒருவர், பௌத்தத்தின் முப்பத்தேழு தத்துவத்தை எப்பொழுது அறிகிறாரோ அப்பொழுதே பேதமை முதலான காரணங் களினாலே உண்டான துக்கங்களைப் பிரித்துப் பிரித்து ஆராய்ந்து பார்க்கிறபடியினாலே - அவருடைய ஐயங்கள் மறைந்து விடுகின்றன' என்று உதானம் (பிரீதி வாக்கியம்) உரைத்தார்.

பின்னர் அந்த இரவின் நடுயாமத்திலே ததாகதர் ஊழின் வட்ட மாகிய பன்னிரு நிதானத்தைக் கடைசியில் இருந்து முதல் வரையில் இவ்வாறு சிந்தித்தார்.

"பேதமை மீளச் செய்கை மீளும் செய்கை மீள வுணர்ச்சி மீளும் உணர்ச்சி மீள அருவுரு மீளும் அருவுரு மீள வாயில் மீளும் வாயில் மீள ஊறு மீளும் ஊறு மீள நுகர்ச்சி மீளும் நுகர்ச்சி மீள வேட்கை மீளும் வேட்கை மீளப் பற்று மீளும் பற்று மீளக் கருமத் தொகுதி