பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை

95

வென்றால், இந்தத் தத்துவம் கடினமானது. சாதாரண மக்களால் அறிந்து கொள்ள முடியாதது. மனத்திற்குச் சாந்தியை யுண்டாக்கி உயர்நிலையை யடையச் செய்கிற இந்தத் தத்துவம் அறிஞர்களால் மட்டுமே அறியக் கூடியது. ஆகையினாலே, ஆசையில் அழுந்தி, சையில் உழன்று, ஆசையில் மகிழ்ச்சி கொள்கிற மக்கள் சார்பு வட்டமாகிய நிதானங்களை அறிந்துகொள்ள முடியாது. சமஸ்காரங்களை வென்று ஆசைகளை அடக்கிக் காமத்தை நீக்கிய அறிஞர்களுக்கு மனச்சாந்தியளித்து நிர்வாண மோக்ஷத்தைத் தருகிற இந்தப் போதனைகளைச் சாதாரண உலக மக்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள். தெரிந்து கொள்ள முடியாதவர்களுக்குப் போதித்து ஏன் வீணாகக் காலங் கழிக்க வேண்டும்?

66

"பெரிதும் வருந்தி முயன்று கைவரப் பெற்ற இந்தப் போதி ஞானத்தை, உலகப் பற்றுக்களில் அழுந்தியிருக்கிற மக்கள் தெரிந்துகொள்ள மாட்டார்கள். ஆசையிலும் பகையிலும் அழுந்தி அடர்ந்த இருட்டிலே கிடக்கிற மக்கள் இதை அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆகையால், புத்த தர்மத்தைப் போதிக்காமல் வாளாயிருப்பதுதான் நல்லது.”

இதைக்கேட்ட சகம்பதி பிரமன், புத்தரை வணங்கி மீண்டும் கூறினான்: “சுவாமி! போதி தர்மத்தை உலகில் போதித்தருளுங்கள். உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்து தர்மோபதேசம் செய்தருளுங்கள். பகவன் சம்புத்தரால் கண்டறியப்பட்ட தர்மத்தை மக்கள் கேட்கட்டும். அஞ்ஞான இருளினால் மறைக்கப்படாத ஞானக்கண் ணுடைய மக்களும் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தர்மோபதேசத்தைக் கேளாவிட்டால், நிர்வாண மோக்ஷ சுகத்தையடையமாட்டார்கள். பகவரே! கருணை கூர்ந்து போதி ஞானத்தை உலகத்தில் போதித் தருளுங்கள்.

وو

பகவன் புத்தர் முன்போலவே கூறி மறுத்தார். பிரமன் மூன்றாம் முறையும் வணங்கி முன்போலவே, உலகத்தில் தர்மோப தேசத்தைச் செய்தருளும்படி வேண்டினான்.

பிரமனுடைய வேண்டுகோளைக் கேட்டு பகவன் புத்தர், மிகவும் இரக்கமும் அன்பும் உள்ள மனத்தோடு, எல்லாவற்றையும் காண்கிற புத்தஞானக் கண்கொண்டு உலகத்தை நோக்கியருளினார். நோக்கியபோது, மாசுபடியாத அறிவுடையவர்களையும் மாசு படிந்த அறிவுடையவர்களை யும், கூரிய அறிவுடையவர்களையும் மங்கிய அறிவுடையவர்களையும்,