பக்கம்:மயில்விழி மான்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மயில்விழி மான்

"ஆமாம்; பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதைக் காட்டிலும் பாடுகிறவர்களைப் பிடிக்கும். முக்கியமாக இப்போது உன்னைப் பார்த்தால்..."

அந்தப் பெண்ணின் முகத்தில் திடீரென்று பயம் காணப்பட்டது. அதன் பொருளை நான் அறிந்து கொள்ளவில்லை.

"ஏன் என்னை இப்படிப் பார்க்கிறீர்?" என்று கேட்டாள்.

நான் சிரித்தேன். அவளை நோக்கி நடந்து கொண்டே, "நீ ஏன் இவ்வளவு அழகாய் இருக்கிறாய்? அதனால் தான் இப்படி பார்க்கிறேன்!" என்றேன்.

அந்தப் பெண் நடுங்கிய குரலில், "உமக்குப் பசியாயிருக்கிறதா?" என்று கேட்டாள்.

எனக்கு அப்போதும் அவளுடைய பயத்தின் காரணம் விளங்கவில்லை.

தமாஷாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு "ஆமாம்; ரொம்பப் பசியாயிருக்கிறது. உன்னை அப்படியே விழுங்கி விடலாமா என்று தோன்றுகிறது!" என்றேன்.

அவ்வளவுதான்; அந்தப் பெண் 'வீல்' என்று ஒரு சத்தமிட்டாள்.

அதற்குப் பதில் குரல் கொடுப்பது போல் என்னைச் சுற்றிப் பல திசைகளிலிருந்தும், "வேல்! வேல்!" என்ற முழக்கங்கள் கேட்டன.