மருதாணி நகம் 51
அவள் அவனை உன்னிப்புடன் நோக்கினுள். வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தவன், எதை வாரிச்சுருட்டிக் கொண்டு வந்தான் என்ற ஊகம் செய்ய அப்படிப் பார்த் தாளா? இல்லை; வாரிச் சுருட்டிக்கொண்டு வந்ததை வாரிச் சுருட்டிக்கொண்டு போகப்போகிருளுே என்ற கணிப்புக்குத் தடயம் காண்வேண்டுமென்கிற தவிப்பில் அவ்வாறு பார்த்தாளா?
“என்னு பஞ்சவர்ணம், போன காரியம் என்னுச்சு?” என்று உரிமை ஓங்கிய குரலில் கேட்டான் அவன்.
"தோதுபோலமுடிஞ்சிருச்சுது!" என்று சுரத்து தணிந்த தொனியில் பதில் சொன்னுள் அவள்.
'உம் பேச்சு ஒரு தினுசா யிருக்கே?" "ஓங்க போக்கு ஒரு மாதிரி போகுதுங்களே!
அவனுடைய நோக்கு அவளை எடை போட்டது. அவளது நோக்கம் அவனை எடை போட்டது. எடை களின் நிறுவை தட்டுத்தடுமாறியது போலவே, அவர்கள்
இருவரின் பார்வைகளும் ஆடின. ஆட்டம் கண்டன.
குனிந்த த லை ைய நிமிர்த்தாமலேயே விசுப் பலகையில் குந்தியிருந்தான் கோலப்பன். இடது கால் முழந்தண்டில் அவன் தலை முட்டுக்கொடுத்துக் கிடந்தது.
“இந்தாப்பாருங்க. ஒங்க மூஞ்சியை நல்லா நிமிர்த்தி எம் மூஞ்சியைப் பாருங்க. நம்ப ரெண்டு பேர் மூஞ்சிக்கும் மூஞ்சிக்கும் ஊடாலே படுதாத்துணி விழுகப் பார்க்குது நம்ப ரெண்டு பேர் மூச்சுக்கும் மூச்சுக்கும் நடுவிலே மண்டையெழுத்து சதி செய்யப் பார்க்குது. இம்மாங் கொத்த வேளையிலே, எனக்கு உண்டாகியிருக்கிற இடுசாமங்கள் ஒண்ணு ரெண்டு இல்லே என்னைச் சுத்தி