பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/982

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

schizamnion

981

schixophrenic


அல்லது சிலேட்டுமப் படலம் வழியாக உடலுக்குள் நுழைகிறது. தனியொரு கிருமி உடலின் ஒரு பகுதியில் வாழ்ந்து, பல ஆண்டுகள் வரை முட்டை யிடுகிறது. கீழ்த்திசை நாடுகளில் இது பெருஞ்சிக்கலாக எழுந்துள்ளது. குடிநீரில் குளோரின் சேர்த்தல், மனிதக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துதல், நன்னீரில் நந்தைகளை ஒழித்தல் ஆகியவற்றின் மூலம் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணலாம்.

schizamnion : பிளவுச்சவ்வுரை : உள் உயிரணுத்திரளில் குழிவறை உருவாவதால் உண்டாகும் பனிக்குட உறை.

schizogony : பிளவுப்பிறப்பு : ஊன்மம் துண்டுகளாகி, உட்கரு பல பிளவுகளாகி பிளவுப் பிறப்பினங்களை உருவாக்கும் வகையில் பாலின வகையல்லாத கருவணுவுயிர் ஒட்டுண்ணி உருவாக்கம்.

schizophrenia : முரண் மூளை நோய்; மூளைச் சிதைவு; உளச்சிதைவு; புத்தி பேதம் : எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்சியின்போதே இடப்பட்டுவிடுகிறது. அப்போது தான் நரம்பு உயிரணுக்கள் வளர்ந்து, கிளை விட்டு, ஒன்றோடொன்று இணைகின்றன. மூளை முதலில் உருப்பெறும்போது, சில நரம்பணுக்கள், தவறான இடங் களில் குடியேறி, மூளையில் நிரந்தரமான அல்லது தவறான இணைப்புகளுடைய சிறுசிறு பகுதிகளை உண்டாக்குகின்றன. கருவுற்றிருக்கும்போது தாயை ஒரு நோய்க்கிருமி பீடித்தால், இந்தத் தவறான இணைப்புகள் முதிர்ச்சியடைந்து விடுகின்றன. உணர்ச்சியின்மை, அறிவு மழுங்கல், மருட்சிகள், அகக்குரல்கள் கேட்டல் போன்ற நோய்க்குறி கள் முக்கியமாகத் தோன்றுகின்றன. இந்த நோய்க்குறிகள் அவை நோயாளியின் வாழ்நாள் முழுவதும் கூடுவதும் குறைவதுமாக இருக்கும். கருவளர்ச்சியின் இரண்டாம் மும்மாதப் பருவத்தின்போது, நரம்பு உள் தகட்டின் மூலமாக மூளை உயிரணுக்கள் இடம்பெயர்வது முழுமையாக நடைபெறுகிறது. இது ஒரளவுக்கு மரபுவழி நோயாகும்.

schixophrenic : முரண் மூளை நோயாளி; புத்தி பேதித்த : முரண் மூளை நோய் கொண்டவர். இந்த நோயைக் குழந்தைப் பருவத்தில் கண்டறியலாம்.