பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

125



ஏதோ ஒரு பள்ளியில் சேர்ந்தாலும் பரவாயில்லை, கல்விதான் முக்கியமானது என்ற மனமாற்றம் லூயி பாஸ்டியருக்கு ஏற்பட்டு விட்டது. அதனால், கல்வியும் - அவரும் இரண்டற ஒன்றி விட்டார்கள்.

பள்ளித் தலைமையாசிரியர், மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் லூயியின் தனித் தன்மையான திறமை களைக் கண்டு அன்போடு பழகினார்கள். கல்வி கற்பதிலும், தேர்வுகள் எழுதுவதிலும் அவர் கவனமாக இருக்கின்றார் என்பதின் அறிகுறியாக நிறைய மதிப்பெண்களைப் பெற்று வந்தார்.

ஆண்டு இறுதித் தேர்வு வந்தது. அதில் லூயி நிறைய மதிப்பெண்கள் பெற்றார்! எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தார். அவர் ஒரு மாணவராக மட்டுமல்லர்; மற்ற மாணவர்களுக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் விருப்பப்படி பாடம் சொல்லிக் கொடுத்தார்! எடுத்துக் காட்டாக;

சென்னை மாநகரிலே இன்றுள்ள லயோலா கல்லூரியில் எஃப்.ஏ.வகுப்பில் நெல்லை மாவட்டம், முள்ளிப் பள்ளம் என்ற ஊரைச் சேர்ந்த எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை என்பவர் படித்துக் கொண்டிருந்தார்.

அவர் ஆங்கில மொழியிலே வல்லவர்; திறமையான அறிவாழம் பெற்றவர். ஆனால், நடுத்தரமான வாழ்க்கை பெற்ற மாணவர். அவர் எஃப்.ஏ. வகுப்புக்குரிய ஆங்கில பாடம் துணை நூலாக சேக்ஷ்பியரின் நாடகங்களில் ஒத்தெல்லோ, ஜூலியஸ் சீசர், கிளியோபாட்ரா, மெர்ச்செண்ட் ஆஃப் வெனிஸ் என்ற நாடகங்கள் பாடங்களாக இருந்தன.

அந்த நாடகங்களையும், அதற்குரிய ஆங்கில நோட்சு களையும் உரையாக எழுதி, நூலாக அச்சிட்டு மாணவர்கள் இடையே விற்பனை செய்திருந்தார் அந்த எஃப்.ஏ. மாணவர் .

மறுநாள் பாடம் நடத்த வகுப்புக்கு வந்தார் ஆங்கில் துணை பாடம் போதிக்கும் பேராசிரியர். ஒவ்வொருவர் கையிலும்