பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

மருத்துவ விஞ்ஞானிகள்


உடை களை இலவசமாக வழங்கினார். ஓராண்டுக்கு லூயி பாஸ்டியருக்கு 300 பிராங்குகளை உதவித் தொகையாக வழங்க உத்தரவிட்டார்:

பள்ளித் தலைமை ஆசிரியரின் பரந்த மனத்தால், பல மாணவர்கள் லூயியிடம் பாடம் கேட்டு அபாரமான பயனைப் பெற்றார்கள். அத்துடனில்லாமல் அந்த தலைமையாசிரியரின் அன்புக்கு நன்றி செலுத்தும் வகையில் லூயி நேரில் சென்று தலைவரை வணங்கினார், மாணவர்கள் பலனடைந்தார்கள்; அதே நேரத்தில் லூயியும் தனது கவனத்தை பணத்தில் சிதற விடாமல், படிப்பில் ஆழ்ந்தும், ஊன்றியும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த இடத்திலே தமிழ்நாட்டு மேக்னிலான் ரூப் பையும் பிரான்ஸ் நாட்டின் லூயி பாஸ்டரையும் ஏன் ஒப்பிட்டோம் என்றால், மாணவராக இருந்து கொண்டே பேராசியர் அறிவுடையவராக இருக்குமளவுக்கு அறிவுப் பொறி அவரவர் திறமைகளில் சுடருதறியதால், இருவேறு நாடுகளில் இருந்த அறிவு வரவேற்பு, வாழ்த்து, உதவிகள், பாராட்டுகள் எவ்வாறிருந்தன என்பதை உணர்ந்திடவே ஒப்பிட்டோம்.

ஜோசப் பாஸ்டியருக்கு, தனது மகன் பள்ளி நிருவாகத் திடம் பணம் பெற்று, மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, எங்கே தனது அருமை மகன் பண போதை யினால் கல்விப் படிக்கட்டுகளிலே இருந்து தவறி விழுந்து விடுவானோ என்று பயந்தார். ஏனென்றால் பணம் வருமானம் பெறவா மகனைப் பள்ளிக்கு அனுப்பினார்? அறிவு வருமானத் திற்காகவல்லவா?

‘மகனே! பண வருவாயல்ல பெரிது; அதற்காக நான் உன்னை அங்கே அனுப்பவில்லை. நீ உதவித் தொகை பெற்றுக் கொடுத்தா நாங்கள் வாழவேண்டும்? ஏழைக்கு என்றும் இருப்பது உழைப்பு அல்லவா? எனவே, பண ஆசையால் படிப்பில் தவறி விடாதே. எச்சரிக்கையோடு இரு பாடத்தில் கவனம் வைத்து தேர்வில் முதல்வனாக வா!’ என்று ஜோசப், லூயியிக்கு கடிதம் எழுதினார்.