மர இனப் பெயர்கள் 85
வாத சுர நாசனி = வாயுவுக்கும் காய்ச்சலுக்கும் அரைக்கீரை நல்லது. காய்ச்சல் அடிக்கும்போது அரைக் கீரையை உண்ணாவிடினும், காய்ச்சல் நின்றதும் உடலைத் தேற்ற உண்ணலாம் பயன்.
வாதம் அறுக்கின்றோன்: மிளகு வாயுவை அறவே அறுத்துப் போக்குதலின் இப்பெயர்த்து. பயன். பாடல்கள்: அகத்தியர் குண பாடம்:
“ அளவையுறாக் காரம் அடைந்திருக்கும் வாத
விளைவையெல்லாம் அறுக்கும் மெய்யே -
மிளகின் காய்'
வாதம் அருசி பித்தம் மாமூலம்......
நாசம் கறிமிளகி னால்’
தேரையர் குணபாடம் :
' கோணுகின்ற பங்கவலி குய்ய வுரோகம்வாதம்...
ஏதுநோய் காயிருக்கில் ஈங்கு” தேரன் வெண்பா:
'போம் திமிர் வாதம்கிரந்தி புண்ணிரும் மண்ணவர்க்கும்
காந்திமெய் வாதச் சலுப்பைக்காய்'
மிளகு வாதம் அறுக்கும் என்பதற்கு மேலும் சான்று வேண்டுமா என்ன !
வாதாடு காளி; காளி சிவனோடு வாதாடியதால் வாதாடு காளி எனப்பட்டாள். காளியின் இப்பெயர் சொல் விளையாட்டாக மணித்தக்காளிக்கும் வைக்கப்பட்டது. மணித்தக்காளி என்பதன் இறுதியில் காளி என்னும் பகுதி இருக்கின்றதல்லவா?
வாந்திசுர நாசணி : வெட்டிவேர், வாந்தியையும் காய்ச்சலையும் போக்கப் பயன்படுமாதலின் இப்பெயர்த்து. பயன்.