பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. யாத்திரைப் படலம்

மூன்று மாதம் முன்ன தாகவே
மனைவியர் இருவர் மாண்டு போயினார்;
நாலாம் மனைவி நாடகக் காரியும்
விடுமுறி[1] போட்டு விலகி விட்டனள்.
ஒருத்தி[2], பாவம், ஒருகதி யில்லாள் 5
நான்கு பிள்ளை நமனுக்குக் கொடுத்தாள்.
பெற்றும் மலடி, பேசா மடந்தை,
எனக்குத் துணையாய் இருந்தாள், அம்மா!
எழுந்து நடக்க இயலா தாகிப்:
பாயிற் கணவர் படுத்த நாள்தொட்டு 10
அடைந்த துயரெலாம் அறிபவர் யாரே?
ஒருநாள்,
தீனம்[3] என்ற செய்தி யறிந்து
மருமகன் வந்தான், வாயிலில் நின்றான்;
எட்டிப் பார்த்தான். இனிஇவர் என்றும் 15


  1. 3. விடுமுறி - கணவனும் மனைவியும் பிரிந்து கொள்வதைக் குறிக்கும் பிரமாண பத்திரம்.
  2. 5. ஒருத்தி - மற்றொரு மனைவி.
  3. 13. தீனம் - நோய்; உடல் நலமின்மை.