பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மருமக்கள்வழி மான்மியம்

படையெடுப்போடு வந்தவர்களா யிருக்கலாம். இன்னும் ஒரு சில குடும்பங்கள் அதற்கு முன்பு அங்கு வந்து சேர்ந்தனவாகக்கூட இருக்கலாம்: சில பூர்வ குடிகளும் இருக்கலாம்; ஆனால் பெரும்பாலோர் பாண்டிய நாடு சோணாடுகளிலிருந்து சென்றவர்களேயாவர். நாஞ்சினாட்டினர் பொதுப்பட இங்ஙனமிருப்ப, அந்நாட்டு வேளாளர் அனைவரும் வெளி நாடுகளிலிருந்து பல நூற்றாண்டுகட்கு முன்பு அங்கே குடியேறிப் படைத் தலைமை பூண்டும் படைவீரராயமைந்தும் நாட்டின் ஆட்சி முறையில் அதிகாரம் வகித்தும் வந்தவர்களே. இவர்கள் நாஞ்சினாட்டில் பெருநிலக்கிழமை பூண்டும் இருந்தனர். பாண்டி முதலிய பிரதேசங்களிலிருந்து வரும் படைகளைத் தடுத்தும், நாட்டின் ஆட்சியில் அதிகாரம் தாங்கி அரசியல் செவ்வையாக நடைபெறுவதற்கு உதவி புரிந்தும், உழவு, வாணியம் முதலிய தொழில்களை மேற்கொண்டு நாட்டின் நலத்தைப் பேணியும் பெருந்தொண்டு புரிந்துவந்தனர். சேர அரசர்களுக்கு இன்றியமையாத பெருங்குடிகளாயமைந்தனர். அரசியல் நடைபெறுவதற்கு வேண்டும் பொருள் வருவாய் பெரும்பாலும் இந்நாஞ்சினாட்டினரிட மிருந்தே பெறக்கூடியதாயிருந்தது. சுருங்கக் கூறின் சேர ராஜ்யத்தின் உயிர் நிலையாயிருந்து. அரசு செழிக்கும்படி செய்தது நாஞ்சினாடாகும்.

ஆனால், நாஞ்சினாட்டினர்—முக்கியமாக நாஞ்சினாட்டு வேளாளர் — எப்பொழுதும் தங்கள் தாயகமாகிய சோழ பாண்டிய தேசங்களையே நோக்கிக்