14
மருமக்கள்வழி மான்மியம்
இப்பெருந் தேயத்து எங்கும் இராப்பகல்
தப்பினும் மாரி தன் கடன் தவறா
கொண்மூ என்னுங் கொள்கலங் கொண்ட
அமிழ்தினை அவ்வயிற் கவிழ்த்தபின் செல்வுழி
வடியும் நீரேநம் மிடிதீர் சாரல்(II, i, 101–108)
★★★
தூவியால் தம்முடல் நீவிடிற் சிரிக்குஞ்
சிறுமியர் என்ன அச் செழுநில நங்கை
உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி
உடல்குழைந்து எங்கும் உலப்பறு செல்வப்
பயிர்மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவன்(II, ii; 140-144)
★★★
எங்கட்கு அந்நாடு உரித்தாம்; அங்குப்
பரவு பாடையும் விரவும் ஆசாரமும்
நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா(1I, iii, 77-79)
என்று மனோன்மணீயம் கூறுமாறு பாண்டியன் தன் கட்சியை எடுத்துரைத்தனன். மேலும் ‘பாண்டியன் அணை’ என்பதும், நாஞ்சினாட்டினர் மக்கள் தாயிகளாயிருத்தலும் அந்நாடு தனக்குரியதேயென்பதை வலியுறுத்துகின்றன என்றனன். பாண்டியன் ஒருவனது நட்பின் ஞாபகார்த்தமாகச் சேர அரசனொருவனாற் பாண்டியன் அணை கட்டப் பெற்றதென்றும் நாஞ்சினாட்டினர் மருமக்கள் - தாயிகளே என்றும் வஞ்சியர் பூபதி வாதித்தனன். முடிவில் நாஞ்சினாட்டினர் மக்கள் - தாயிகளா அல்லது மருமக்கள் - தாயிகளா என்பதைப் பொறுத்ததாயிற்று இவ்வுரிமை விவாதம். இதனை அந்நாட்டினரே தீர்க்க வேண்டியதாயிற்று. அவர்கள் எக்காரணத்தாலோ சேரர் குடிகளாய் வாழ்தலை விரும்பினர். இவ் விருப்பத்திற்கிணங்க, தாங்கள் மருமக்கள்—