இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மருமக்கள்வழி மான்மியம்
விநாயகர் வணக்கம்
எம்பெரு மானே! இணையடி பரவும்
அன்பினர் வேண்டிடும் அவையெலாம் அளிக்க
யானை நீள்கரம் ஏந்திய கடவுளே!
உலகெலாம் போற்றும் ஒருவனே! உனது
தந்தையோ.
5
என்றும் சையில் தலையோ டேந்தி
இரந்து திரிவான், இருப்பிட மில்லான்.
அம்பலந் தோறும் ஆடி அலைவான்,
அமிழ்தென நஞ்சையும் அள்ளி யுண்பான்,
பித்தனாகிப் பேயொடு குனிப்பான்,
10
நாடிய பொருளெலாம் நாசஞ் செய்வான்.
மாமனோ,
2-3. இவ்வடிகளுக்கு இருவகையாகப் பொருள் கூறலாம். 'அன்பினர்' உனக்கு வேண்டிக்கொள்பலற்றை
யெல்லாம் வாரியுண்பதற்கு (அளிக்க) வசதியாக யானை நீள்கரம் ஏந்தினாய் என்பதொன்று. 'அன்பினர் உன்னிடம்
வேண்டுபவற்றையெல்லாம் அவர்களுக்கு அளிக்க யானை நீள்
கரம் ஏந்தினாய்' என்பது மற்றொன்று.
20. குனிப்பரன்-நடமாடுவாள்.