பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. குலமுறை கிளத்து படலம்



என்கதை கேளும்! என்கதை கேளும்!
இரக்க முள்ளோரே என்கதை கேளும்;
நூல்களைக் கற்ற நுண்ணறி வோரே!
நடுநிலை நீதி நடத்தும்நல் லோரே!
மக்களைப் பெற்று வளர்க்கும் சீலரே! 5
ஏழையென் துயரம் எல்லாம் கேளும்.
காசினி மீதென் கதைபோல் இல்லை.
சீதையின் கதையும்[1] சிறுகதை யாகும்.
பாஞ்சா லியின்கதை[2] பழங்கதை யாகும்.
தமியேன் கதைக்குச் சந்திர மதிகதை[3] 10
உமியாம், தவிடாம், ஊதும் பொடியாம்.
கேளும் !கேளும்! என்கதை கேளும்!
பதும நாபன் பாத பங்கயம்[4].


  1. 8. சீதையின் கதை: இராமாயணம்.
  2. 9. பாஞ்சாலி கதை: மகாபாரதம்.
  3. 10. சந்திரமதி கதை: அரிச்சந்திர புராணம்.
  4. 13. பதுமநாபன்-திருவனந்தபுரத்தில் எழுந்தருளியுள்ள
    திருமால், பாத பங்கயம்-திருவடித் தாமரை