44
மருமக்கள்வழி மான்மியம்
உழைத்துப் பொருளுண் டாக்க வேண்டும்;
எனக்கினி யிங்கே யாதுண் டம்மா?"
என்று பெருமூச் செறிந்து சொல்லி.
இருந்த இடம்விட் டகலவே மாட்டாள்.
அடுத்த அக்காள், அழுபிள்ளைக் காரி;
55
அடமும் கொஞ்சம் அதிகம் கொண்டவள்;
அம்மா, மிளகை அரைஎன் றால்உடன்
அவள்கை மதலை அழுவது கேட்டிடும்;
பிள்ளைக் குணமோ, பிடுங்கி வைப்பாளோ.
என்ன மாயமோ, யானேதும் அறியேன்.
60
மூன்றாம் அக்காள் முழுச்சோம் பேறி.
அன்றியும்,
மூன்று மாதமாய் முழுகவு மில்லை;[1]
வாயா லெடுப்பாள் வயாக்கோட் டியினால்;[2]
ஏறின கட்டில் இறங்கவே மாட்டள்.
65
இனியோர் அக்காள் எடுப்புக் காரி.[3]
இந்தி ராணியும் ஈடிலை; இவளது
மஞ்சள் பூச்சும் மயக்கிடு பேச்சும்
சாந்துப் பொட்டும் தாசிகள் மெட்டும்
கோல உடையும் குலுக்கு நடையும்
70
கொண்டை யழகும் கண்டு, கணவர்
அண்டையி லிருந்தும் அகலவே ஒட்டார்;
'தங்கப் பெண்ணே தாராவே!
தட்டான் கண்டால் பொன்என்பான்[4]