பரிகலப் படலம்
57
என்ன செய்யலாம்! இறந்துபோ யினரே!)
வந்தொரு வாறு வழக்கைத் தீர்த்தார்;
'ஒவ்வொரு நாளைக் கொவ்வொரு மனைவி
புருஷன் எச்சில் புசித்திட வேண்டும்;
இடையில்.
50
தீபா வளியோ, திருக்கார்த் திகையோ,
வேறிம் மாதிரி விசேஷ நாளோ,
வந்திடு மாகில், வரிசை வரிசையாய்
ஐந்திலை யிட்டவை அனைத்திலும் அமுது
படைத்துப் புருஷன் பருகிய பின்னர்
55
பரிகலத் துள்ள பதார்த்த மெல்லாம்
மனைவியர் சரியாய் வகுத்துண வேண்டும்.
வழக்குகள் ஒன்றும் வரலா காது'எனக்
கூறிப் போயினர்; கூடி யிருந்தோர்
யாவரும், 'இதுவே நீதி' என்றனர்.
60
என்றவர்
கலகமுண் டான காரண மறிந்து
சிரித்து நின்றார், ‘சீசீ’ யென்றார்;
‘எச்சில் இலைக்காய் இந்தக் களரி
கூட்டுவரோ?‘[1] எனக் கூறிப் போனார்.
65
ஐயோ!
துயரம், துயரம், பிறப்பே துயரம்;
பிறப்பினும் துயரம் பெண்மக ளாதல்;
பெண்மக ளாதலிற் பெரிதும் துயரம்
மருமக் கள்வழி வலையிற் படுதல்;
70
வலையிற் பட்டு வருந்தலில் துயரம் ஓர்
- ↑ 64-65. களரி கூட்டுதல்: சண்டையிடுதல்.