பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. வாழ்த்துப் படலம்

.......இக்கொடு மொழிகளாம்[1]
கருதற் கரிய கருடாஸ் திரங்கள்
பலவும் நெஞ்சிற் பாய, மருமகன்,
புண்பட்டுள்ளம் பொறுக்க முடியாது.
ஐயோ! என்றுகண் ணீர்விட்டு அழுது, 5
தந்தை தாயர் தம்மிடம் சென்று
விளைந்த எல்லாம் விரிவா யுரைத்தான்;
கோபம் பொங்கிக் கொதித்து வரும்படி
சிற்சில இடையிடை சேர்த்தும் கொண்டான்.
செப்பிய சொற்கள் தீயிற் காய்ச்சிய 10
கம்பிகள் போல்இரு காதும் நுழைந்திட,
வீர பத்திரப் பிள்ளை வெகுண்டு,
கால்நிமி ஷத்துஎன் கணவரைக் கண்டு,
"அட்டா மூடா! அதர்மசண் டாளா!
வஞ்சகா! கொடிய மறவா/ குறவா! 15
நெஞ்சில் இரக்கம் இல்லா நீசா !
மடையா! நீயென் மகனை நோக்கி
ஊத்தை வாயால் உளறின மொழிகளை
இன்னும் ஒருமுறை என்முன் வந்து


  1. 1. ஏட்டிற் பொடிவு