பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. கோடேறிக் குடிமுடித்த படலம்

ஐயோ! ஐயோ! அடங்கா வீர
பத்திரப் பிள்ளை, (அப் பாவி பாதகன், என்
குடியைக் கெடுத்த கொடிய சண்டாளன்,
அரக்கன், ஏழரை ஆண்டைச் சனியன்)
விரைவில் ஓடி வீட்டில் சென்று, 5
மனைவியை அழைத்து மண்டையைக் காட்டி, உன்
அண்ணன் அடித்த அடிகளைப் பாரடி!
இன்றைக்கு,
உயிர்போ காமல் இருந்தது உன் தாலிப்
பாக்கியம் தானடி, பகவான் செயலடி! 10
அவன், எண்ணிப் பாராது ஏசின ஏச்சிவ்
கடுகள் வேனும் உன் காதில் விழுந்தால், நீ
நஞ்சைத் தின்பாய். நான்று சாவாய்,
நாக்கைப் பிடுங்கி நடுங்கி இறப்பாய்,
ஆற்றில் குளத்தில் அலறி விழுவாய்,
சங்கிலித் துறைபோய்ச்[1] சாடி யொழிவாய்;
இதற்கோர் ஐயம் இல்லை, இல்லையே!


  1. 16. சங்கிலித் துறை - கன்னியாகுமரிக் கடலில் தீர்த்தமாடும் இடத்தை யடுத்துள்ள ஆழமான ஓரிடம். தீர்த்தமாடுவோர் அலைகளால் அடித்துச் செல்லப்படாதவாறு இரும்புச்
    சங்கிலியால் அங்கே வேலி போட்டிருக்கும்.