கோடேறிக் குடி முடித்த படலம்
89
பத்திரச் சுருளும் பகர்ப்புச் சுருளும்,[1]
எல்லாம் சுமடாய்க் கட்டி, இரண்டொரு
40
முண்டைப் போட்டு மூடிப் பொதிந்து
தோளில் வைத்துச் சுமந்து கொண்டு,
நாகையம்[2] பதியை நாடிச் சென்றனர்.
அங்கு,
நீதிக் கெல்லாம் நிலைய மாகியும்
45
உண்மைக் கெல்லாம் உறைவிட மாகியும்
கருணைக் கெல்லாம் களஞ்சிய மாகியும்
வாழும் நியாய வாதிகள் தங்கும்
வீதியை முற்ற விலகிச் சென்று, வீண்
விவகா ரங்கள் விளைநில மாகியும்
50
பொய்கள் அடைக்கலம் புகுமிட மாகியும்
குதர்க்கம் குடிகொளும் குகையிட மாகியும்
திருஅவ தாரம் செய்தன் றிருந்த ஓர்
அண்டப் புரட்டன் வக்கீல்ஆ பீஸில்
ஆனைப் பொய்யன் குமஸ்தனை யறிந்து,
55
காரியம் சொன்னார். கதைகளும் சொன்னார்;
'காரணவ னைப்பல காரணத் தாலே
மாற்றும் படிக்கு வந்தோம்' என்றார்;
புற்றை விட்டுப் புறம்போ காமல்
பட்டினி கிடக்கும் பாம்பின் வாயில்
60
தேரை குதித்துச் சென்று விழுவது
நாகம்முன் செய்த நல்வினைப் பயனோ?
தேரைமுன் செய்த தீவினைப் பயனோ?