பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறவர் சீமை

"உம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து உமது தரப்பில் சொல்லிக்கொள்ள ஏதேனும் விரும்புகிறீரா?

மயிலப்பன் சேர்வைக்காரர் "ஏதும் இல்லை” என பதில் அளித்தது கும்பெனியாரது இந்த நீதி விசாரணை என்ற நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

"தீர்ப்புரை ஒருவாரத்தில் வழங்கப்படும்" என நீதி மன்றத் தலைமை நடுவர் சொன்னதுடன், அன்றைய விசாரணை முடிவுபெற்று, நடுவர்கள் மூவரும் எழுந்து அவர்களது அறைக்குச் சென்றனர்.