பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 62 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வாசித்தரம் தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.


தோல் பதனிடும் தொழில், தமிழகத்தில் மேலோங்கி யுள்ளது. வாணியம்பாடி, ஆம்பூர், பல்லாவரம் இதற்குச் சான்றாகும். துணி உற்பத்தியும் அதிகம். நீலகிரி மாவட்டத்தில் மரங்களும் அதிகம். நம் தமிழகத்திலேயே விளையாட்டுப் பொருட்களை சிறப்பாகத் தயார் செய்ய முடியும். தனியார் நிறுவனங்களும் அரசாங்கமும் இ: கருத்தைப் பரிசிலித்து ஆவன செய்தால், எல்லோர்கைக்குப் விளையாட்டுப் பொருள்கள் எளிதாகப் போய்ச் சேரும்.


விளையாட்டானது சமுதாயத்தை சக்தி மிகுந்ததாக மாற்றுகிறது. சக்தி மிகுந்த சமுதாயம், நாட்டின் பெருமையை உணர்த்துகிறது. அந்த அற்புத நிலைக்கு விளையாட்டுப் பொருள்கள் அடிப்படையாக இருந்து உதவி கின்றன. ஒரு இனிய சமுதாயம் அமைக்க உங்களை யெல்லாம் அழைக்கிறோம்.