பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

39



ஒ, ற்று, உயிர் என்ற ஜீவியத்தைப் பெற்று, உலா வந்திருக் கிறது! எப்படி ?


விந்து தந்த சிந்து


தாயின் கர்ப்பப்பையை நோக்கி. தந்தை ஒருவனது. வீரியம் மிகுந்த விந்திலிருந்து, 225 லட்ச ஜீவ அணுக்கள், 8 மணி நேர மாரதான் ஒட்டத்தை ஒடுகின்றன.


எந்த ஜீவ அணு முந்திக் கொண்டு தாயின் கர்ப்ப முட்டையை முதலில் அடைகிறதோ, அதுவே அருமையான பரிசைப் பெறுகிறது. வாழ்க்கை என்ற உயர்ந்த உருவத்தை பெற்று, பெருமையடைகிறது.


ஆக, ஒவ்வொரு மனிதனின் ஆரம்பமே, முடிவில்லாத ஒட்டப் பந்தயமாகத் தானே இருக்கிறது. வெற்றி பெற்ற விந்தணுவின் வியூகமாக மாறி வந்த மனிதன். வாழ்க்கையில் ஒடுவதை. சாடிப் பேசுகிறான். என்றால், அவன் சரிந்து போகத் தொடங்கிவிட்டான் என்பதாகத் தானே அர்த்தம் ஆகிறது!


ஒட்டமும் ஊட்டமும்


ஒடியவர்கள், ஒடுகிறவர்கள் உயர்ந்த வாழ்வைப் பெறுகின்றனர். உன்னத மகிழ்ச்சியை அடைகின்றனர்.


ஒப்பற்ற நலமான தேகத்தைத் துய்க்கின்றனர். பிறந்ததின் பேரின்பத்தை எய்தி பெரு வாழ்வு வாழ்கின்றனர்.


ஒடுவதால் இவையெல்லாம் கிடைக்கும் என்று நீங்கள் ‘கம்மா? சொல்லுகின்றீர்கள். என்று நீங்கள் நினைக்க லாம். அல்ல-அல்ல ஆராய்ச்சியின் முடிவும் அன்றாட அனுபவமும் உண்மையைத் தவிர, வேறெதையும் விளம்பு வதில்லை.