பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



இது நாம் எதிர்பார்ப்பதற்கு மாறான பலனேயாகும்.


தசைகளை மெதுவாக சுருங்குமாறு இயக்கி, அதன் போக்கில், மெதுவாக நீண்டுவிடச் செய்வதுதான் சரியான பயிற்சி முறையாகும்.


கடுமையாகக் குதித்தல், துள்ளல், தாண்டுதல், தசை களை இயக்குதல் எல்லாம், தசைக் காயத்தையும் தசைச் சுளுக்கையும் ஏற்படுத்தி விடும். ஆகவே, மெதுவாக, இத மாக, பதமாகப் பயிற்சி செய்யும் முறைகளே பாதுகாப்பான முறையாகும்.


இதற்கும் ஒரு காரணம் உண்டு.


ஒவ்வொரு தசையிலும் ஒரு உணர்வு நரம்பு உண்டு. அந்தத் தசை இயங்கும் போது, அது பற்றிய சேதியை மூளைக்கு எடுத்துச் செல்லவும், அது எப்படி இயங்க வேண் டும் என்பதைக் கொண்டுவந்து அந்தத் தசைக்குத் தரவும், அந்த உண்ர்வு நரம்பு பணியாற்றுகிறது


திடீரென்று கடுமையானப் பயிற்சியை செய்யும் போது, தசையால் நீளவோ சுருங்கச் செய்யவோ இயலாத போது அந்தத் தசைக்குள் வலி ஏற்படுத்துவது அந்த நரம்புகளின் செயலினால்தான், அந்த வலி, தசையை அதிகமாக ‘நீட்டாதே சுருக்காதே’ என்பதற்கான அபாய அறிவிப்பு தான். வலி ஏற்படும் போது நிறுத்திக் கொள்ள வேண்டும். நிதானமாகி விட வேண்டும்.


ஆகவே, குனியும் போது அல்லது வளையும் போது மெதுவாகவே, கொஞ்சங் கொஞ்சமாகவே தொடர வேண்டும். வலி ஏற்படுகிற இடத்தில் அப்படியே நிறுத்தி விட்டு, மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட வேண்டும்.