இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
காயுங்கிழங்குகளுமேயாதல் தெற்றெனப் புலனாகின்ற தன்றோ? என்று இதுகாறுங் கூறியவாற்றால் உலகத்தின் கண் தொன்று தொட்டுப் பரவியிருக்கும் யூதம்,சைவம்,பாரசிகம்,சமணம்,பௌத்தம், கிறிஸ்துவம், கிரேக்கம், மகமதியம் என்னுஞ் சிறந்த சமயங்களும், அச்சமயங்களை நிலைநாட்டிய சான்றோர்களும், அவர்கள் அருளிச் செய்த வேதங்களும் ஆகிய எல்லாம் ஒத்து ஒருமுகமாய் நின்று கொலைத் தொழிலால் வரும் ஊனுணவை முற்றும் விலக்கிச் சைவ உணவினையே வற்புறுத்திக் கூறுதல் இனிது விளங்கா நிற்கும் என்பது.