84
மறைமலையம் 12
அம்பிகாபதி : அங்ஙனமாயின், நீ யாரைச் சாவக் கொடுத்தனை?
நயினார்: இல்லை, இல்லை, யான் எவரையுஞ் சாகக் கொடுக்கவில்லை. உயிரோடிருக்கும் ஒருவர் பொருட் ாகவே என்னுயிர் தத்தளிக்கின்றது.
அம்பிகாபதி : அவர் யார்? ஆணா? பெண்ணா?
நயினார்: அவர் ஓர் அழகிய பெண்.
அம்பிகாபதி: அப்பெண்ணிற்காக நீ ஏன் அவ்வளவு துன்புறல் வேண்டும்?
நயினார் : அவளைக் காணாமலிருக்க முடியவில்லை. கண்டாலோ அவளைக் கூடாமலிருக்க முடியவில்லை; என் செய்வேன்!
அம்பிகாபதி : அப்பெண் திருமணம் ஆகாதவளா யிருந்தால் அவளை நீ திருமணம் செய்துகொள்ளளாமே.
நயினார் : அவள் திருமணமாகாத கன்னிப்பெண்தான். உன்னைப் பார்த்தால் அவளைப் பார்ப்பது போலிருக் கின்றது.
அம்பிகாபதி : அற்றேல், அவளை நீ மணப்பதற்கு யான் டைநின்று செய்யக்கூடிய உதவியிருந்தாற் சொல். யான் எவ்வகையிலேனும் அதனைச் செய்து முடிப்பேன். நின் னினும் எனக்குச் சிறந்தார் யார்? நின் உயிர்வருந்த யான் காணேன்.
நயினார் : ஈது உறுதிதானா?
அம்பிகாபதி : எப்போதாயினும் யான் கூறிய சொல்லிற் பிழைத்ததுண்டா? என்னை வேறு நினைந்து பிழை செய்
யாதே!
நயினார் : இல்லை, இல்லை. நீ நின் வாய்மையில் என்றும் பிழைத்திலை. என் அச்சமே நின் வாய்மொழியை ஐயுறச் செய்தது. இதைப் பார்! (காவேரி விடுத்த திருமுக ஓலையை நீட்டுகின்றான்)