இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அம்பிகாபதி அமராவதி *
151
கேள்வர் நின்னை வந்தணைதற்கு ஒரு வழி பிறக்குமென்று நினைக்கிறேன்.
அமராவதி : (பரபரப்புடன்) அஃதென்ன வழி நீலம்? நமதரண்மணையைச் சூழக் காவலர்கள் இரவில் நிறுத்தப் பட்டிருக்கின்றனரே! ஏதோரு தீங்கும் நேராமல் என் கணவர் என்பால் வருவதற்கு இடம் எது?
நீலம் : அதைப் பற்றி இப்போதொன்றும் என்னாற் சொல்லல் முடியாது. பிறகு இறைவி அருள் செய்வள். (எல்லாரும் மனவமைதியுடன் உணவருந்தப்போய் விடுகின்றனர்)