10
இவ்வியல்பை
மறைமலையம் 17
ப உற்று நோக்குங்காற், கடவுளை
அச்சத்தால் வணங்குவோர் நிலைக்கும், அன்பினால் வணங்குவோர் நிலைக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளங்கா நிற்கும்.
“கடவுள் ஒப்புயர்வு அற்ற செல்வமும் சல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் உடையவர்; அவரை வணங்காது ஒழியின் நமக்குத் தீங்குண்டாம்” என்னும் அளவே கருதி, அவரை அச்சத்தால் வணங்குவோர் தாழ்ந்த நிலையினராவர். "மேற்குறித்த வளங்களையுடையனாதலுடன், எம்பெருமான் ஒன்றுக்கும் பற்றாத எளியேங்களிடத்தும் அளவிறந்த அன்பும் இரக்கமும் உடையன்” எனக் கருதி அவனை அன்பினால் வணங்குவோர் உயர்ந்த நிலையினராவர். அன்பினால் வணங்கும் உயர்ந்த நிலையினரே கடவுளின் உண்மையை உணர்ந்தாராவர்.
ஏ னன்றால், கடவுள் எல்லையற்ற செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் மட்டுமேயுடையரல்லர்; அறியாமையுந் துன்பமும் உடைய எல்லா உயிர்களுக்கும் அவ்விரண்டையும் நீக்கி, அறிவும் இன்பமுந் தருதற்கு அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளின் அருமையை எண்ணிப் பார்க்கப் பார்க்க அவர் எல்லா உயிர்களிடத்தும் எல்லையற்ற அன்பும் இரக்கமும் உடையவரென்பது தெளிவாக விளங்குகின்றது.
நாம்
நம் உடம்பிலுள்ள உறுப்புக்களிற் கண்ணினும் சிறந்தது பிறிதில்லை; கண் இல்லையானால் நமது அறிவு முக்காற் பங்குக்கு மேல் விளங்காது ஒழியும். இத்துணைச் சிறந்த கண்ணையும், இதற்கு அடுத்த சிறப்பிலுள்ள ஏனைய உறுப்புக் களையும் தாமாகவே படைத்துக்கொள்ள வல்லவர்கள் எங்கேனும் உளரோ? இல்லையன்றே! எவராலும் படைக்க முடியாத இவ்வரும் பறல் உறுப்புக்களை, கேளாதிருக்கையிலும், நமக்குப் படைத்துக் கொடுத்தவன் நம்பால் எவ்வளவு அன்பும், எவ்வளவு இரக்கமும் உடைய வனாயிருக்க வேண்டும்! இது பற்றியன்றோ மேனாட்டிற் சிறந்தமெய்ந் நூலாசிரியரான ஒருவர் (Bergson) கண்ணின் வியப்பான அமைப்பை ஆராய்ந்து காட்டிக் கடவுளின் அறிவாற்றலையும் அருளையும் நிலை நாட்டினார். ஆகவே, கடவுள் வகுத்த இவ்வியற்கையமைப்பின் திறங்களை